திதி நிர்ணய வெண்பா
பூண்டதிதி தேய்பிறை பத்தினில் - வேண்டித்தாம்
கந்தனடி சேர்ந்தார் கணேசமூர்த்தி யன்னார்தம்
பந்தம் அறுத்த படி
வரலாறு
தமிழுஞ் சைவமும் தழைத்தே ஓங்கும்
யாழ்நகர் கொண்ட துறைமுக நகராய்
வாழ்வகை மக்கள் வாழும் ஊராய்
தாங்கிய பெருநகர் காங்கேசன் துறையில்
நற்குடி வந்த நல்லோர் வழியில்
அற்புதம் என்றே இணைந்தார் இருவர்
காதல் இணையர் காசிவிஸ்வ நாதர்
செல்லம்மா தம்பதிகள் செழுமை சேர்ந்த
நல்லறம் இயற்றி நலமே வாழ்கையில்
பொங்கும் மகிழ்வால் புதுமணஞ் சிறக்க
மக்கள் ஐவரை மனம்போல் பெற்றார்
பக்கத் தவரும் பண்பாற் சிறந்தார்!
காத்த கருவெனக் கணேச மூர்த்தியாய்
முத்தர் பரம்பரையின் முதல்மகன் இவனென
அத்தனை பேரும் அகம்மகிழ்ந் திருந்தார்!
வேணவா வுந்த விருப்பின் பேரில்
நற்றாய் நடேஸ்வராவை நாடிச் சென்றார்
பெற்றார் மகிழப் பெரும்பே றுற்றார்!
வல்லவ ராகி வளர்ந்திடுங் காலை
உயர்தரக் கல்வியில் ஊக்கஞ் செல்ல
அயலில் இருந்த மகாஜனக் கல்லூரியில்
அணியெனத் திகழ்ந்தார் அவர்வகுப் பதனில்
தந்தை வழியிற் தனயன் தன்னின்
சிந்தை தாமும் சென்றது தாமே!
வங்கிப் பணிதாம் வாய்த்த போது
அங்கும் துணிவொடு யார்க்கும் உதவி
மங்காப் புகழொடு மனிதம் காத்தார்!
உடலை அழகாய் உருக்கொள வைத்தார்
காங்கேயன் நகரில் காளைகள் சேர
ஆங்கிவர் தாமும் அரங்கிடை வந்தார்
நாட்டினர் வெற்றி நல்லெழி லாலே
பேணிய உடலாற் பெருமை கொண்டார்
ஆணழக னாகி அகந்தாம் மகிழ்ந்தார்!
இளமைப் பருவம் இசைந்த போதில்
அன்பும் பண்பும் அருளும் இல்வாழ்வில்
இன்பொடு இணைய இசைந்தார் தாமே!
உருபெற் றெழுந்த மாவைப் பதியின்
சீர்பெறு மரபின் சிந்தைச் சிறப்பால்
ஊர்தொழ நின்ற உத்தம இணையர்
வன்னங் காட்டும் வாழ்வின் பயனாம்
ஐவரில் முதலாய் ராணி தாமும்
தெய்வ மகளாய்த் தேடி வந்தாள்
உளமது கொண்ட உத்தமி யான
பச்சங் கொண்ட பாச உறவாம்
மச்சாள் புவன ராணியைத் துணையாய்
ஆற்றிடுங் காலை அவர்தம் சேயாய்
கஜபதி தந்த குலப்பதி யென்றே
கஜபதி பெயரால் அழைத்தனர் நன்றே!
தமையன் தனுக்கோர் துணையென் றாங்கும்;
இமையவன் என்னும் இளையான் தன்னொடு
அமைந்த வாழ்வில் அனைவரும் மகிழ்ந்தனர்!
தக்கது அனைத்தும் தந்தே அவரை
உற்றார் போற்றும் உயர்நிலை தந்தே
பெற்றார் கடனைப் பேறெனக் கொண்டார்
இருவரும் இணைய இசைந்த போதில்
அவரவர் துணையை அவரவர் தேடும்
தவநிலை தம்மைத் தந்தே மகிழ்ந்தார!
பெற்றோர் வழியிற் பெற்றே வளர்ந்த
கன்னல் மொழியாள் கௌசிகா தம்மின்
வன்னங் கண்டே வரித்தான் கஜபதி!
அன்பில் பண்பில் அயர்வில் உழைப்பில்
என்றும் இளையாள் இளையோன் தேர்வாய்
நன்றே அமைந்தாள் நற்றவப் பேறாய்!
குலமது தழைக்குங் குதூகலம் பொங்க
நலமொடு வாழ்ந்தார் நாளும் போதும்!
உயர்குணங் கொண்ட டிநேசன் என்பார்
கிடைத்த போதில் கிட்டிய தவமென
அடைந்த மகிழ்வோ அதற்கிணை இல்லை!
தோதவ ளென்னுந் தூயவள் சாரா
என்றே பின்னர் இருவர் வரவால்
ஒன்றாய்க் குடும்பம் உயர்ந்த தாங்கே!
வல்லவ ராகி வாண்மைகள் காட்டும்
பேரர்தம் வாழ்வின் பெருமை கண்டே
ஆரத் தழுவி அகந்தாம் மகிழ்ந்தார்!
தம்பக்கம் யாவரையும் ஈர்த்திடும் இயல்பும்
நேரிய பேச்சும் நிமிர்ந்த நடையும்
கூரிய மதியும் கொண்ட ததனால்
இன்ப வாழ்வில் இருந்தார் நன்றே!
இறைப்பணி செய்தும் இல்லார்க் குதவியும்
நிறைவாய் வாழ்ந்தே நிம்மதி கொண்டார்!
அன்புமனையாளின்
அகம் நிறைத்த நினைவுகள் .. ..
புவனராணி
எந்தையே எங்கேகினீர் - எம்
சிந்தை கலங்கிடவே .. ..
குஞ்சு குஞ்சென்று என்னைக் கொஞ்சி மகிழும் தாத்தாவே .. ..
அன்புள்ள அண்ணாவிற்கு..!!
அண்ணா என்றும் உங்கள் அழைப்பு சின்னத்தம்பி என்று சொல்வது எனது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
எனது சிறு பிராயத்தில் இருந்தே எனது குற்றம், குறைகளை சுட்டிக்காட்டி நல்வழி காட்டியாக இந்தீர்கள். கோபம் முன் வந்தாலும் சிறு நேரத்தில் அதை மறந்து அன்பாகப் பழகுவீர். அண்ணா எங்கள் திருமணத்தையும் முன் நின்று நடத்தினீர்கள்.
இறுதிக் காலத்தில் உடல்ரீதியாக நலிவுற்று இருந்த போதும் உங்கள் புன்னகை மாறவில்லை. இறுதியாக எனது கரங்களைப் பிடித்து தலையசைத்து அனுப்பியது இன்றும் என் கண்முன்னே நிற்கிறது. நானும் செல்வராணியும் இறுதியாக பார்க்கும் போது புன்முறுவலுடன் இருந்தீர்கள். மறக்க முடியாது அண்ணா.
உங்கள் ஆத்மா சாந்தியடை இறைவனைப்பிரத்திப்போம்.
பிரிவால் துயருறும்
அன்புத்தம்பி மற்றும் செல்வராணி
In Loving Memory of Periyamachchan
I called him Periyamachchan. The first thing which comes to my mind is him making his own fish tanks in different sizes. Had tropical and cold water fish in them. My brother and I loved to feed the fish when we came on holiday from Colombo to Jaffna. We would help him clean the tanks. He loved us helping him. He taught us how to siphon water out of the tanks which was lot of fun for us.
He also liked bodybuilding and we used to be facinated watching him working out with dumbbells. He was quite naughty and stubborn when he was a teenager. If anyone scolded him for being naughty he would climb up the mango tree and would refuse to come down even if it got dark and was quite late at night. Maami (his mother) would stand under the tree begging him to come down. We all would have our dinner and go to bed, leaving him up the tree and in the morning we would find him in the kitchen having his breakfast. No one talked about it and the whole incident would be forgotten. He was a very kind and a good hearted person. I know for sure my late mother had a soft spot for him in her heart. You can easily say that he was her favourite nephew for sure. We were quite shocked when we heard the sad news of his death. I will surely miss him and will carry the treasured memories with me forever.
May his soul rest in peace.
Loving cousin Jothy
![]() |
| உதயன் பத்திரிகை 31-07-2024 |
![]() |
| வலம்புலரி பத்திரிகை 31-07-2024 |
![]() |
| வலம்புலரி பத்திரிகை 31-07-2024 |
புகைப்படங்கள்
நன்றி நவில்கின்றோம்
'எந்நன்றி கொன்றார்க்கம் உய்வுண்டாம் உய்வில்லை
செநன்றி கொன்ற மகற்கு"
அமரர் காசிவிஸ்வநாதன் கணேசமூர்த்தி
திடீர் மரணச் செய்தி கேட்டு எமது துக்கத்தில் பங்கு கொண்டு இறுதிக்கிரியை நிகழ்வுகளில் நேரடியாகவும் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத்தளம் மூலமும் ஆறுதல் மொழி பகிர்ந்தோர்க்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரம் மற்றும் பதாகைகள் வெளியிட்டோர்க்கும் எமது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்வதுடன் எமது இல்லத்தில் நடைபெற்ற அந்தியேட்டி கிரியை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்தித்த அனைவருக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக இதயபூர்வமாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின்
குடும்பத்தினர்

.jpg)
.jpg)
.jpg)









.jpeg)




0 comments:
Post a Comment